அரவிந்த் சச்சிதானந்தம்
-
ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – 6
6 “The spirit of Creation is the spirit of Contradiction- the breakthrough of appearances toward an unknown reality”- John Cocteau கான்ப்ளிக்ட் (Conflict) கடந்த அத்தியாயத்தில் கதாநாயகன் பற்றி பேசும் போது எந்த திரைக்கதையாக இருந்தாலும் கதாநாயகனோடு பார்வையாளர்களுக்கு தொடர்பு ஏற்பட வேண்டும் என்றோம். ஒரு திரைக்கதையாசிரியன் எப்படி இதை எல்லாம் திட்டமிட்டு எழுதுவது? இதற்கு ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்? ஒரு கதாப்பாத்திரத்தை அதன் சூழலில் வைத்து சிந்திக்க… Continue reading
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 5
5 “The scariest moment is always just before you start. After that, things can only get better” – Stephen King கதாநாயகன் ஒரு திரைக்கதையில் மூல கதாப்பாத்திரத்தை ப்ரோட்டாகனிஸ்ட் என்கிறோம். ஹீரோ என்கிறோம். கதாநாயகன் என்கிறோம். பொதுவான கதாப்பாத்திரங்களிலிருந்து ஒரு கதாநாயகன் எங்ஙனம் மாறுபடுகிறான்! கதாநாயகனெனில், அவனுக்கென்று ஒரு தெளிவான நோக்கம் அல்லது இலக்கு இருக்க வேண்டும். அதை அடைய வேண்டும் என்கிற அகத் தூண்டல் இருக்க வேண்டும். அந்த… Continue reading
-
ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல்
வணக்கம். என்னுடைய அடுத்த நாவல் ‘ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்’ வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி கதைச்சுருக்கம் விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள்.***தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார்… Continue reading
-
ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -1
உலகம் முழுக்க ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. நாவலாக, படமாக, நாடகமாக என வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வகையான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. அத்தகைய கதைகளின் புறத்தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் அந்த கதையின் ஆன்மாவில் ஒரு பொதுத்தன்மையை கண்டுகொள்ள முடியும் என்கிறார் ராபர்ட் மெக்கீ. இதை அவர் ‘யூனிவெர்சல் பார்ம்’ Continue reading
-
செவன் சாமுராய்-டொனால்ட் ரிச்
நன்றி நிழல் செவன் சாமுராய் (ஏழு சாமுராய்கள்) -டொனால்ட் ரிச் தமிழில். அரவிந்த் சச்சிதானந்தம் ஒரு அசலான பீரியட் படத்தை-ஜிடாய்கேகி வகை (சாமுராய் படங்கள்) திரைப்படத்தை எடுத்துவிட வேண்டும் என்பதே குரோசாவாவின் நெடுநாள் கனவாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ஜப்பானில் எடுக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்ட படங்கள் ஜிடாய்கேகி (jidaigeki) வகை திரைப்படங்கள் தான் என்றாலும் அசலான ஜிடாய்கேகி திரைப்படங்கள் அரிதாகவே எடுக்கப்பட்டன. பெரும்பான்மையான படங்கள் வெறும் கத்திச் சண்டை காட்சிகளை கொண்ட ‘சம்பாரா’ வகை படங்களாக மட்டுமே… Continue reading
-
பத்தாண்டு பயணம்
இன்று இந்த இணையதளம் தன்னுடைய பத்தாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இது என் வாழ்வின் மிக முக்கியமான பத்தாண்டுகள். தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் மனம் விரும்பும் எல்லாவற்றையும் எழுதிடும் உந்துதலையும் வாய்ப்பையும் இந்த தளம் தான் கொடுத்து வருகிறது. ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதுவோம். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி
தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என்னுடைய 3 பிஹெச்கே வீடு என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இன்றைய (27.06.2021) தினமணி கதிரில் கதை வெளியாகி இருக்கிறது நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading
-
44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்
அந்தாதி வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய பின்வரும் புத்தகங்கள் 44- வது சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (அரங்கு எண் 166,167) கிடைக்கும். நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading