• அட்டு பீசு-ஒரு நிமிடக் கதை

    பேருந்திற்காக அந்த நான்கு பெண்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில் அங்கே வந்து சேர்ந்தான் அந்தக் குறுந்தாடிக்காரன்.  “கடவுளே! என்ன ஏன் இந்த மாதிரி அட்டு பீசுங்கள பார்க்க வைக்கிற!” என்று அவர்களை கேலி செய்ய தொடங்கினான்.சகித்துக்கொண்டிருப்பதை தவிர அந்த பெண்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.அந்த நேரம் பார்த்து அவர்களை  காப்பாற்றுவதற்க்காகவே  ஆபத்பாண்டவன்போல் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்.  “என்னமா! கலாய்க்கிறானா? டேய்! இதுவே உன் கூடப் பிறந்தவங்களா இருந்தா இப்படி கிண்டல் பண்ணுவியா? “  “அதான் கூடப் பொறக்கலையே”  “என்னடா தெனாவட்டா பேசுற……”  “இன்னும்… Continue reading

  • நைட் ஷிப்ட்

    “Every Guilty Person is his Own hangman”-Lucius Annaeus Seneca “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா ” திடிர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுபாங்க.  ராத்திரில மட்டும்தான்  பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டு செத்த எழுதப் படாத அந்த கவைக்குதவாத சட்டத்தை கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒன்னும்… Continue reading

  • கறுப்புப் பெண்

    வண்ணத் தொலைக்காட்சியிலும் கருப்பாகவே தெரிந்தாள் அந்த கறுப்புப் பெண்   அவளை பார்த்தவாறே கரமைதுனம் செய்கிறான் இளைஞன், வெள்ளை தோளை நினைத்துக்கொண்டே…   தோளில் கூடவா அந்நிய மோகம் ! உதாசீனப்படுத்திவிட்டு தொடர்கிறான்   பின்னொரு நாள்-கருப்பான தன் மனையாளை பெண்டாள்கிறான் வெள்ளை நடிகையை நினைத்துக்கொண்டே… Continue reading

  • அரவான்

    விமர்சனம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் முழு கதையையும் விவரிப்பது, உலக சினிமாவின் உன்னத ரசிகனாகிய நான், என்னைப் போன்ற ரசிகர்களுக்கு செய்கிற துரோகம். அதே சமயத்தில் சில முக்கிய காட்சிகளை விவரிக்காமல் விமர்சனம் எழுதிவிடமுடியாது… அருமையான ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு, கலைஇயக்கம், அருமையான நடிகர்கள்  என்று பல அனுகூலமான விடயங்களிருந்தும் பல காரணங்களால் ‘ அரவான்’ ஒரு சராசரி படமாகவே விளங்குகிறது. உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பாததால், இதை சராசரி படம் என முன்னமே சொல்லிவிடுகிறேன். வலுவற்ற திரைக்கதையால்,… Continue reading

  • முனைவர் முருகேசன்

    1 பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர் வகுப்பறை மட்டும் சற்று சப்தமாகவே காணப்பட்டது. பல கூத்துகளும் கிண்டல்களும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன. இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைந்தார் வகுப்பாசிரியர்  முருகேசன். வகுப்பே நிசப்தமாயிற்று. அவர் மேலிருக்கும் மரியாதையினாலோ, பயத்தினாலோ அன்று. அவர் கூறும் வழக்கமான அந்த மூன்று சொற்களை எதிர்பார்த்து, “டுடே நோ கிளாஸ்” அவர்… Continue reading

  • தமிழ் எழுத்தாளனின் மரணம்

    அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக  மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ… Continue reading

  • விடாது பைக்

    மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக். “யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது. “யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது. வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு… Continue reading

  • ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை

    ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை   எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக… Continue reading

  • பிணம் தின்னி

    பிணம் தின்னி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்  அது பெரும் சிரிப்பு பேருவகைச் சிரிப்பு மனமெல்லாம் ஆனந்த களிப்பு கண்களில் சாதித்த வெறி கைகளை தட்டி தட்டி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் கை தட்டளுக்கிடயே சிக்குண்டு செத்தது என் இனம் அவள் பெரும் குரல் எழுப்பிச்  சிரிக்கிறாள் அதில் ஒழிந்து போகிறது, என் மீனவனின் கதறல் ஒலி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் வலி… இழவு வீட்டில் வந்து சிரித்துவிட்டு , அவர்கள் சுகமாகத்தான் உள்ளார்கள் என கூறி கூறி… Continue reading

  • மயக்கம் என்ன

    மயக்கம் என்ன தமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின் வாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம் முயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட இலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை. இங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப் பற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப் பற்றி  யாரும் படப் பிடிக்க விரும்பியதில்லை.  ஒவ்வொருவரும் வாழ்கையில்  ஏதோ ஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம், அவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ் சினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது. “ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர் படமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை. இங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை. போலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக பயணிக்கும்        கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய வந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம் இருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு. அப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு பயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’ வனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம். பல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை அடைகிறான். ஆங்கிலத்தில் வந்த Pursuit of happiness, Cinderalla man, Beautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றாத ஓர் அருமையான படம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’  படத்திலும் கதாநாயகன் இலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன் சித்தாந்தம்  பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால் மயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன். உங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,… Continue reading