அரவிந்த் சச்சிதானந்தம்
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3
“எழுதுவது என்பது குழந்தை மணலில் விளையாடுவதைப் போல. அது பொருட்களை கலைத்து அடுக்கி விளையாடுவது போல் எழுத்தில் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஒவ்வொரு பக்கத்தையும் அலங்கரித்திட முடியம். எழுதுவதில் எனக்குப் பிடித்த விஷயம் இது தான். நாம் காலை எழுதத் தொடங்கும் போது நாம் திட்டமிட்டிருக்காத ஒரு வடிவத்தை அந்த எழுத்து அடைந்துவிடும் தருணமே அன்றைய நாளின் தலைசிறந்த தருணம்” – Markus Zusak *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம்… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2
The Writer must believe in what he writes – Robert Mckee *** பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting‘. அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம். முந்தைய… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால்,… Continue reading
-
சித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை
1 கி.பி. 2063. அடர்ந்த காட்டினுள்விரிந்து சென்ற நீண்ட அந்த ஒத்தையடிப் பாதையின் முன்பு வந்து நின்றனர் பேராசிரியர் ராகவும், அவரது மகன் சஞ்சையும். சஞ்சையின் மகன் ‘கே’வும், மகள் ‘பிரக்ன்யா’வும் உடன் இருந்தார்கள். அவர்கள்இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ராகவின் தலைமையில் உற்சாகமாக புறப்பட்டனர். அப்போது குழுவில் இருபது பேர் இருந்தனர். தங்களின் நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு கிளம்பிய அந்த குழுவில் பலரும் பல காரணங்களால் வழியிலேயே பிரிந்துபோக இப்போது… Continue reading
-
என் ஆசான்- அகிரா குரோசவா
1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த… Continue reading
-
யாரோ ஒருவர்
உங்கள் குழந்தையை முதன்முதலில் நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும் யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான் யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார் உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய் நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான் யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள் நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு… Continue reading
-
கதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் அறிவுசார் சொத்துரிமை தரவரிசை பட்டியலில் இந்தியா வெகுநாட்களாகவே கடைசி பத்து இடங்களுக்குள் தான் இருக்கிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக குறியீடு என இன்னும் பல படைப்புகளின் (கண்டுபிடிப்புகளின்) உரிமையை உள்ளடக்கியது. அதாவது படைப்புகளின் உரிமை படைத்தவர்க்கே சொந்தம் என்பதே அறிவுசார் சொத்துரிமை கொள்கை. பல ஆண்டுகளாக நாம் இதில் பின்தங்கி இருந்ததற்கான காரணம் வெறும் விழிப்புணர்வு சார்ந்தது மட்டும் அல்ல. இங்கே படைப்புரிமை கோருவதற்கான வழிமுறைகள் அவ்வளவு எளிதாக இல்லாமல்… Continue reading
-
ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு
ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் 2018-யில் தொடர்ச்சியாக பலமாதங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு பேசிக் போன் வைத்து கழித்த (சேகரித்த) அனுபவம் 1. நம்முடைய சுற்றத்தை அதிகம் கவனிக்க ஆரம்பிப்போம். மன அமைதி கிட்டும். ரயிலில், பஸ்ஸில், ஷேர் ஆட்டோவில் யாரெல்லாம் வழக்கமாக உடன் பயணிக்கிறார்கள், என்ன உரையாடுகிறார்கள் யார் எங்கே இறங்குகிறார்கள் எல்லாமே கவனத்தில் வரும். எப்போதும் தலையை ஃபோனில் வைத்துக் கொள்ள மாட்டோம். சக பயணிகளை பார்த்து… Continue reading