புனைவுகள்

  • திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை

    “அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம். “ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி. அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு Continue reading

  • நைட் ஷிப்ட்

    “Every Guilty Person is his Own hangman”-Lucius Annaeus Seneca “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா ” திடிர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுபாங்க.  ராத்திரில மட்டும்தான்  பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டு செத்த எழுதப் படாத அந்த கவைக்குதவாத சட்டத்தை கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒன்னும் Continue reading

  • முனைவர் முருகேசன்

    1 பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர் வகுப்பறை மட்டும் சற்று சப்தமாகவே காணப்பட்டது. பல கூத்துகளும் கிண்டல்களும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன. இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைந்தார் வகுப்பாசிரியர்  முருகேசன். வகுப்பே நிசப்தமாயிற்று. அவர் மேலிருக்கும் மரியாதையினாலோ, பயத்தினாலோ அன்று. அவர் கூறும் வழக்கமான அந்த மூன்று சொற்களை எதிர்பார்த்து, “டுடே நோ கிளாஸ்” அவர் Continue reading

  • விடாது பைக்

    மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக். “யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது. “யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது. வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு Continue reading

  • மாசற்ற காதல்

    மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும்  காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற  சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது  காதலும் இல்லை காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை.அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக Continue reading

  • நான் ஓர் விலைமாது

    மணி பத்து ஆச்சு, இன்னும் பாஸ்கர் சாரா காணோம். பாஸ்கர் சார் யாருனு கேக்குறீங்களா ? அவருதாங்க அந்த மாடிவூட்டுக்காரர். பெரிய பாங்க் ஆபிசர். ஒன்பது மணி ஆச்சுன்னா போதும், அவரு வீட்டு வாசல்ல  வெத்தலய்ய மென்னுக்கிட்டே உக்காந்திருப்பாரு.வீட்டுலயே எவ்வளவு நேரம்தான் சும்மா ஊக்கந்திருக்குறது ! புழுக்கமா இருக்காதா ? அதான் காத்தோட்டமா அரைக்கை பனியன் ஒண்ண போட்டுக்கிட்டு, போற வறோங்க எல்லாரையும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு. அவருக்கு குல்ஃபினா ரொம்ப புடிக்கும். எனக்கு அவர ரொம்ப Continue reading

  • ஒழுங்கற்ற நெறிமுறைகள்

    முன் குறிப்பு: கடந்த வருடம் இந்த கதையை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதும்போது எளிதாகவே  இருந்தது. ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இது ஒரு முயற்சியே. இந்த கதை எந்த  கோட்பாடுகளிலும் அடங்காமல் போகும் பட்சத்தில் என்னுடைய புது முயற்சி என எடுத்துக் கொள்ளவும்.. ……………………………….. அந்த காரின் கதவுகள் வேகமாக திறந்தன. அவள் சிரித்துக்கொண்டே அந்த வெள்ளை நிறக் காரில் ஏறினாள். அவள் அணிந்திருந்த அந்த சீன ரோலெக்ஸ் கடிகாரம் 6.30  எனக் Continue reading

  • கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும்

    கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 . பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம்  அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. ‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாரே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய Continue reading

  • ஒரு பெண்ணின் கதை

    அந்த பொண்ண பத்தி என்ன சொல்றது.. நிச்சயமா கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதினு வர்ணிக்க முடியாது. ஏனா அவ கண்ணகி இல்லை..ஆனாலும் அவ அழகா இருந்தா.. கண்ணகியோ மாதவியோ பொண்ணு பொண்ணுதான் கண்ணெல்லாம் மை.. இரத்த சோக புடிச்சு கண்ண சுத்தி கருவளையம் வந்தா எப்படி இருக்குமோ அது மாதிரி, கண்ணெல்லாம் மை.. கண் இமைகள்ல மட்டும் மை போட்டது அந்த காலம். இப்ப இமைகள தவிர எல்லாம் எடத்துலயும் போடணும்…மைய… தலைய வலப் பக்கம் வகுடு எடுத்து இடப் பக்கம் எப்படியோ சுருட்டி ஏதோமாதிரி வாரியிருந்தா..இல்ல வாரல..எனக்கு சொல்ல தெரியுல..பொண்ணுகள ரெண்டு வகை உண்டு..ஒன்னு முடிய படிய வாருரவுங்க..இன்னொன்னு அதா விரிச்சு போட்டுக்குட்டு வழியெல்லாம் உதிர விட்டுக்கிட்டு சுத்துறவங்க..கொல்லிமலை கருப்பு சாமி கோயிலுக்கு பின்னாடி இருக்குற காடு மாதிரி இருந்தது, அவ தலமுடி .. உடம்புல அது அது இருக்க வேண்டிய இடத்துல்ல இல்ல . அதாவது தலைல போடா வேண்டிய கிளிப்ப இடுப்புல போட்டுருந்தா.. ஏதோ ஒரு கொலாய மாட்டியிருந்தா. ஜிகு ஜிகுனு ஒரு மேலாடை காத்துல ஆட நடந்து வந்தா.. நான் அந்த கடையில (தாபா) சூப்பு ஆர்டர் பண்ணிட்டு வாசல உட்கார்ந்து வேடிக்க பார்த்துக்கிட்டு இருந்தேன். உள்ள ஒரே கூட்டம். அவ திடிர்னு கைப்பேசில பேசிக்கிட்டே வெளிய வந்தா… அவ ஒரு ஹிந்திகாரி..ஹிந்தில கெட்ட கெட்ட வார்த்தைல யாரையோ திட்டிக்கிட்டுஇருந்தா..(ஹிந்தில எனக்கு கெட்ட வார்த்தைதான் அதிகம் தெரியும், எந்த மொழியா இருந்தாலும் கெட்ட வார்த்ததான் முதல கத்துக்க முடியும்) அந்த சம்பாசனை பின்வருமாறுதான் எப்படியோ இருந்துச்சு.. “இப்ப முடியாது” … “சொன்னா  புருஞ்சுக்கோ. திரும்பி உள்ள போலனா சந்தேகம் வந்திடும் “ … Continue reading