tamil

  • நான் ஒரு ஜடம்

    என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன் ஆதி அந்தமற்ற ஒருவனாய் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் சுட்டெரிக்கும் வெயில் குளிரடிக்கும் காற்று முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும் என்னை கவர்ந்துவிடவுமில்லை பறந்து விரிந்த இந்த வானம் காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும் என்னை அசைத்துவிடவில்லை ஆம் நான் ஒரு ஜடம் உலகம் என்னை அப்படி தான் அழைக்கும் என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் பார்த்துகொண்டு Continue reading

  • உதிக்க மறுத்திடுமோ சூரியன்!

    அதிகாலை பொழுது கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை… நான் மட்டும் தனியாக சாலையில் எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது தனிமைப்பட்ட என்னுடன்… நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில் பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில் அன்று கண்டேன், இயற்கையின் சரீரத்தையும் சமுகத்தின் குரூரத்தையும்… சாலையின் வலப்புறம் புதருக்கடியில்… புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்… சாலையின் இடப்புறம் இரண்டு நாய்கள் இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை காணவில்லை நான் Continue reading

  • திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை

    “அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம். “ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி. அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு Continue reading

  • தமிழ் எழுத்தாளனின் மரணம்

    அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக  மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ Continue reading