-
எதையாவது எழுதலாம்
எதையாவது எழுதலாம் எழுதவே பிறந்தேன் எனலாம் யாரவது பதிப்பாளரை நட்பாக்கிக் கொள்ளலாம் புத்தகம் வெளியிடலாம் ராயல்டி தரமாட்டார் சண்டை போடலாம் விருது வாங்கிக் கொடுப்பார் வாயை மூடிக்கொள்ளலாம் புரட்சி என்று நினைத்து எழுதலாம் பிரச்சனையா புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கலாம் யாருக்கும் புரியாது பரவாயில்லை பின்நவீனத்துவம் என்று சொல்லிகொள்ளலாம் Continue reading
-
மேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2
சினிமா பேசும் புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம். கதை எழுதுவது தொடங்கி படத்தை திரையிடுவது வரை எல்லாவற்றைப் பற்றியும் எல்லா துறைகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார் லூமெட். ஒரு கதை எதைப் பற்றியது? திரைக்கதையாசிரியர், இயக்குனர் தொடங்கி படத்தொகுப்பாளர் வரை எல்லோருமே தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் என்கிறார் லூமெட். இந்த கேள்வி தான் புத்தகம் முழுக்க வருகிறது. மேலும் படத்தின் முடிவு பார்வையாளர்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியையும்… Continue reading
-
சினிமா புத்தகங்கள்-1 (On Directing film- David Mamet)
தமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது?’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது?’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த… Continue reading
-
நான்காவது பிறந்தநாள்- aravindhskumar.com
வணக்கம். இந்த தளத்திற்கு இன்று நான்காவது பிறந்தநாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்… ‘நகுலனின் நாய் சிறுகதைத் தொகுப்பு’- பிரிண்ட் புத்தகத்தை அடுத்த சில நாட்களுக்கு ஐம்பது சதவீத கழிவில் இங்கே வாங்கலாம். ask4 என்ற discount code-ஐ பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ஒன்றுமில்லை- கவிதை
என் வீட்டின் மேல் வட்டமிட்ட அந்த புறா முட்டையிட்டு சென்றது ஒருநாள்… முட்டையை நான் பாதுகாத்தேன் மிதமான சூட்டில்… ஒரு நாள் கண்டேன் உடைந்த முட்டை அதனருகில் ஓர் பாம்பு இன்னும் விளங்கவில்லை ! புறா முட்டையிலிருந்து எப்படி வந்தது பாம்பு ! *** நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன் உள்ளே என்ன என்றேன் ஒன்றுமில்லை என்றான் மூட்டையை அவிழ்த்தேன் ஆம் ஒன்றுமே இல்லை. Continue reading
-
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சொல்லித்தரும் திரைக்கதை
‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி… Continue reading
-
நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நகுலனின் நாய்’ அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. பிரிண்ட் புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள Discount code-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நகுலனின் நாய்-Paperback பக்கங்கள்: 96 விலை: Rs 50 (free shipping) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் நகுலனின் நாய்-e-book-Pdf விலை: Rs 20 Available Format: Pdf ஈ-புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்… Continue reading