-
திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1

1 கதை “We are, as a species, addicted to story. Even when the body goes to sleep, the mind stays up all night, telling itself stories.” Jonathan Gottschall ‘கதை’ என்ற சொல் சிறுவயதிலிருந்தே நமக்கு மிகமிக பரிட்சயமானதாக இருக்கிறது. கதை என்றால் என்ன என்கிற தத்துவங்கள் எல்லாம் புத்திக்கு எட்டுவதற்கு முன்பே, கதை கேட்பது நம் மனதிற்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு ஊரில் ஒரு… Continue reading
-
சாமுராயின் வாள்- சிறுகதை
தலை குனிந்து நடந்தாலும் கண் கூசச் செய்யும் வெயில். தெருவில் யாருமில்லை. ஞாயிறு மதியம் என்பதால் வீட்டிற்குள் முடங்கிய உலகம். எங்கிருந்தோ ஆங்கில இசைப் பாடல் காதில் கேட்கிறது. Into this house, we’re bornInto this world, we’re thrown வியர்வை வழிகிறது. வெயில் சோர்வை தருவதால் அடுத்த அடி எடுத்து வைக்க கடினமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரத்தில் என் வீடு. நடக்கிறேன். தொலைவில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. நிமிர்ந்து பார்க்கிறேன். டிரான்ஸபார்மர்… Continue reading
-
கடைசி நாள்- குறுநாவல்- கிண்டில் பதிப்பு
உலக புத்தக தினமான இன்று (23. 04.2023), கணையாழி-முனைவர் செண்பகம் ராமசுவாமி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற, என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதையின் கிண்டில் பதிப்பை வெளியிடுவதில் மகிழ்கிறேன். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Click to buy Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர்
FADE IN: நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன்… Continue reading
-
குறுநாவலுக்காக ஓர் பரிசு- புகைப்படங்கள்
கடந்த வாரம் (14.03.2023) மதுரையில் நடந்த திருமதி. செண்பகம் ராமசுவாமி அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு நாளில், கணையாழி குறுநாவல் போட்டியில் – மூன்றாம் பரிசு பெற்ற “கடைசி நாள்’ என்கிற குறுநாவலுக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி மு.ராமசுவாமி மற்றும் கணையாழி Continue reading
-
அவள்- சிறுகதை
Originally posted on Aravindh Sachidanandam: அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று. சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று… Continue reading
-
மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்
மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்-ரிச்சர்ட் சிக்கேல் ரிச்சர்ட் சிக்கேல் மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் உரையாடி எழுதிய புத்தகத்தின் ஒரு சிறு பகுதி. தமிழாக்கம்: அரவிந்த் சச்சிதானந்தம் *** படத்தொகுப்பு ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பகாலங்களில் படத்தொகுப்பிலும் உங்களுடைய பங்களிப்பு இருந்தது என்று அறிவேன். ஆனால் உங்களுடைய பல படங்களுக்கு நீங்களே படத்தொகுப்பு செய்திருக்கிறீர்கள் என்பது. நாம் பேசத் தொடங்கும் வரை எனக்கு தெரியாது. எப்படி படத்தொகுப்பை கற்றுக் கொண்டீர்கள்? படத்தொகுப்பு செய்து அதை பழகிக் கொண்டீர்களா? மார்ட்டின் ஸ்கோர்செஸி:… Continue reading
-
லவ் @ 30- சிறுகதை
Originally posted on Aravindh Sachidanandam: 21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது.? யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த… Continue reading
-
தைப்பூசம்- சிறுகதை
Originally posted on Aravindh Sachidanandam: ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு? காரை நிறுத்தினேன். “கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம். “திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து… Continue reading