aravindh sachidanandam poems
-
ஒன்றுமில்லை- கவிதை
என் வீட்டின் மேல் வட்டமிட்ட அந்த புறா முட்டையிட்டு சென்றது ஒருநாள்… முட்டையை நான் பாதுகாத்தேன் மிதமான சூட்டில்… ஒரு நாள் கண்டேன் உடைந்த முட்டை அதனருகில் ஓர் பாம்பு இன்னும் விளங்கவில்லை ! புறா முட்டையிலிருந்து எப்படி வந்தது பாம்பு ! *** நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன் உள்ளே என்ன என்றேன் ஒன்றுமில்லை என்றான் மூட்டையை அவிழ்த்தேன் ஆம் ஒன்றுமே இல்லை. Continue reading