-
அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- அரங்கேற்றம்
என்னுடைய ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ என்கிற சிறுகதை நேற்று (17.11.2024) Alliance Française Madras- யில் மேடை நாடகமாக அரங்கேறியது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய சிறுகதைகளில் நான் முக்கியமானதாக கருதும் கதைகளில் ஒன்று ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’. காரணம், இது பேசும் அரசியல். வெளிப்படையாக பலரும் பேசத் தயங்கும் அரசியல்… இது வேலை, பணம் அதன் இயலாமை தரும் மனம் அழுத்தத்தை பற்றிய கதையாக தோன்றினாலும் இதன் ஆதாரம், வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு… Continue reading
-
அநிருத்தன்-மேடை நாடகம்
என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் இடம்: Alliance Francaise, Nungambakkam நாள்: நவம்பர் 17, 2024 இயக்கம்: முருகானந்தம் எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி Continue reading
-
3 BHK வீடு- சிறுகதை
பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று… Continue reading
-
மைக்ரோ பார்வை- 1- அப்பம் வடை தயிர்சாதம்- பாலகுமாரன்
இதன் ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு தொடர்பற்ற தன்மை இருக்கிறது. அது இந்நாவல் தொடர்கதையாக எழுதப்பட்டதால் இருக்கலாம். ஆனால் இறுதியில் எல்லா புள்ளிகளும் மிக அழகாக இணைகின்றன. ஒரு தலைமுறைக்கு நிகழ்ந்ததே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிகழ்வதே இதன் சுவாரஸ்யம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புரோகித தொழிலை விட்டுவிட நினைக்கிறது ஒரு பிராமண குடும்பம். வைதீகத்திற்கு மதிப்பு இல்லை, வருங்காலம் இல்லை என்று கருதுகிறார் அந்த குடும்பப் பெரியவர். கும்பகோணத்தில் தற்காலிகமாக சிறிய சுண்டல் கடை தொடங்கி அதற்கு பெரும்… Continue reading
-
பதின்மூன்று ஆண்டு பயணம்

இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொல்வதற்கு… Continue reading
-
Manjummel Boys- கொஞ்சம் திரைக்கதை
உருவாக்கத்தில் செய்நேர்த்தி, ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யம், கதை கருவில் உள்ள விறுவிறுப்பு இதெல்லாம் இத்திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கலாம். ஆனால் திரைக்கதை கலையின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை கடந்து, அதன் திரைக்கதை போக்கை ஆராய்வது அவசியம் ஆகிறது. மிகவும் நல்ல படம் என்கிற மாய தோற்றத்தை நம் மனதில் உருவாக்கிவிடும் இது போன்றதொரு படத்த்தின் திரைக்கதையை ஆராய்வது உண்மையிலேயே நல்ல திரைக்கதை எழுத விரும்புவோற்க்கு வழிகாட்டியாக பயன்படும் என்பதாலே நாம் இதை… Continue reading
-
குறுங்கதை-10- தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை
தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை. அதனால்… Continue reading
