7 ஆம் அறிவு


7 ஆம்அறிவு

முன்குறிப்பு 

இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை..ஆனால் ஓர் தவறான முன் உதாரணமாக இத்திரைப்படம் அமைந்து விடக்கூடிய வாய்புகள் அதிகமுள்ளதால் இதை எழுதுகிறேன்.. கல்லாவை நிரப்ப கோயபெல்ஸ் (Goebbels) வேலையை நன்றாகவே செய்துள்ளனர்.. மரியான  அசுயேல  (Mariana Azuela ) எழுதிய ஓர் நாவலில் (Underdogs), எதுக்கு போராடுகிறோம் என்று தெரியாமலேயே ஓர் கூட்டம்  போராடும்.(அண்ணா ஹசாரே கூட்டம்  போல்! )

 அதுபோல் இந்த படம் பார்த்த சிலர் திடிரென தமிழ் உணர்வு பெற்று ஆனந்த  கூத்தாடுகிறார்கள்…தமிழ் உணர்வு என்பது இலக்கியத்தில் இருக்கவேண்டும்…சக தமிழனின் மீது கொண்ட அக்கரையில் இருக்க வேண்டும்…சங்க தமிழை பேணி காப்பதில் இருக்கவேண்டும்..சமகாலத்தில் தமிழுக்கு செய்யும் தொண்டில் இருக்க வேண்டும்..அதை விடுத்து பழைய பெருமைகளை பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனுமில்லை… …

7 ஆம்அறிவு

மனிதனின் ஆறாம் அறிவே அதிகம் பயன்படுத்தப்படாத ஓர் உலகத்தில், தன் ஏழாம் அறிவை உபயோகப் படுத்தி ஓர் கலை காவியத்தை படைத்துள்ள இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இப்படி சொல்லலைனா என்ன தமிழனே இல்லன்னு சொல்லிருவாங்க. ஏனா இந்த படத்துல தமிழனுக்கு ஆதரவா நாலு வசனம் வருது. அதுக்காக ஊர்ல இருக்குற பச்சை தமிழனுங்க பல பேரு என்னவோ இந்த படத்துக்கு அப்புறம்தான் தான் தமிழன்னு உணர்ந்த மாதிரி  துடிக்கிரானுங்க. நாமும் துடிப்போம். உணர்வு இருக்கிற மாதிரியாவது நடிப்போம்.

தூள் படத்தில் வில்லன் ஒரு அறிக்கை விடுவார்,:” உடம்புல தமிழ் ரத்தம் ஓடுற ஒவ்வருத்தனும் இந்த உண்ணாவிரதத்துக்கு வரணும் “.

உடனே எல்லாம் உண்ணாவிரதத்துக்குஓடுவானுங்க. அது மாதிரி தான் இந்த படமும்.

தமிழ் மீது பற்றுள்ள, தமிழ் இலக்கியத்தின் மீது தீராத ஆர்வமுள்ள பலரும், பல வருடமா சொல்லிகிட்டிருக்குற ஒரு விடயத்தின் சிறு பகுதியைதான் திரு.முருகதாஸ் இந்தபடத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனா ரொம்ப உணர்ச்சிவச பட்டதனாலோ என்னவோஅத அவர் ஒழுங்கா சொல்லல.

தமிழனின் பெருமைய பத்தி நிறைய சொல்லலாம்.அதை பத்தி எந்த ஐயப்பாடுமில்லை.மிதக்கும் தன்மையை (buoyancy) ஆர்கிமேடிசுக்கு (Archimedes) முன்பே சொன்னது தமிழன். அணுவை கூராக்கும் (divisibility of atom) தன்மையை கண்டவன் தமிழன்.ஆனா ஏழாம் அறிவ பொறுத்த வரையில் கருத்துக்கள் எந்த வகையில் சொல்லப்பட்டதுன்னு இன்னும் தெரியுல.

 அறுபது வருடமா திராவிட கட்சிகள் தமிழ் என்ற ஆயுதத்த வைத்து தமிழன ஏமாத்துற மாதிரியே இந்த படத்துலயும் கல்லா கட்டுறதுக்காக தமிழன கேனையன் ஆக்கிடாங்களோ   !

 முதல் இருபது நிமிடம் 

 முதல் இருபது நிமிடம்  ஆவணப் படம் பாணியில் அமைந்துள்ளது.ஆவணப்படமென்றால் உண்மை இருக்கணும். ஆனா இதுல போதிதர்மன ரொம்ப நல்லவரா வல்லவரா  காட்டனும்  என்பதற்காக ரொம்ப சரடு திருசுட்டாங்க, ஏதோ ஏசுநாதர் ‘கருணாமூர்த்தி’ சீரியல் பார்த்தமாதிரி இருந்துச்சு. இவரு போவாராம், நோய குணப்படுதுவாரம், அப்பறம் சண்ட போடுவாராம், அப்பறம் விஷம் குடிச்சு செத்துருவாராம்,நான் தெரியாமதான் கேக்குறேன் அவரு என்ன அவ்வளவு பெரிய அப்பட்டக்கரா !

 சினிமால சினிமாத்தனம் இருக்கலாம். ஆனால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டிருக்கணும், இங்க இயக்குனர் பர்மா பஜார் டி.வீ.டி நிறைய பார்த்து இருப்பாரு போல. போதிதர்மனுக்கு மருதநாயகம் கமல் மாதிரி ஒரு கெட்டப். “மொங்கோல்” என்கிற ஓர் ரஷ்ய படத்துல இருந்து உருவுன சண்டைகாட்சினு கதை நகர்கிறது.

 ஆனா அந்த சினிமாத்தனமான புருடாக்கள் ஆவணப்படம் மாதிரி காட்டப்பட்டதனால் அதை ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.

 போதிதர்மன் தமிழரா !

 பல்லவர்கள் தமிழர்களா?, என்ற கேள்விக்கே இன்னும் தெளிவான விடை கண்டுபிடிக்கப்படல..பல்லவகுல தோற்றம் பற்றி நிறைய வாதங்கள் நிலவினாலும்  பெரிதாக நம்பப்படுகிற, பலராலும் முன் வைக்கப்படுகிற வாதங்கள் மூன்று

சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கும், தமிழ் பேசும் நாக வம்சத்தை (இலங்கை ) சேர்ந்த பில்லி வலைஎன்ற இளவரசிக்கும் பிறந்த தொண்டை இளந்திரையன் மூலமாக உருவானதே பல்லவ குலம் என்பதுமுதல் கூற்று. கொஞ்சம் பகுத்துணர்ந்து  பார்போமேயானால், பல்லவர்கள தமிழர்களஅடையாளப் படுத்தனும் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த கூற்று சித்தரிக்கப்பட்டிருப்பதைஉணரலாம்.

அடுத்த கூற்று, பல்லவ குலம் த்ரோனாசாரியரின் பேரன் மூலமா தோன்றியது என்பது. இது தமிழனுக்கு எதிரா இருந்த ஏதோ ஒர் கூட்டம் கிளப்பிவிட்ட கதையா இருக்கலாம்.

அடுத்தது, பல்லவர்கள் கடல் கடந்து வந்தவர்கள், இந்திய துணை கண்டத்தையே சாராதவர்கள்…

ஆனால் இதுநாள் வரை தெளிவான ஆதாரம் எதுவும்கிட்டவில்லை.. (தமிழில் சமணர்கள் பௌத்தர்களால் இயற்றப்பட்ட பல அருமையான இலக்கியங்கள் சைவர்களால் அழிக்கப்பட்டது. அந்த இலக்கியங்களோடுசேர்ந்து பண்டைய தமிழ் சமுதாயத்தப்பற்றிய பல குறிப்புகளும் அழிஞ்சுபோச்சு.தமிழ் அழிந்ததற்கு அழிவதற்கு தமிழனே காரணம்.)

 இந்நிலையில் போதிதர்மனை பற்றியும் நிறைய புருடாக்கள் படத்தில் விடப்பட்டிருக்கு.. இது வரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்றில், போதிதர்மன் என்ற பல்லவ குல இளவரசன் தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு தன் குருநாதார் பிரஜ்னாதார அவர்களின் கட்டளைக்கு இணங்கி   பௌத்தத்தை பரப்புவதற்காக தமிழகத்திலிருந்து வெளியேறினார் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .

பல இடங்களுக்கு பயணம் செய்து, சில இடங்களில் நற் பெயர் கொண்டு, பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டு பின் ஒருநாள்தான் ஷாலின்  கோவிலை (shaolin temple ) அடைந்தார்.

 முற்காலத்தில் பௌத்தத்தில் உடலை வருத்தி கடும் தவம் புரியும்  ஓர் முறை பின்பற்றப்பட்டது. போதிசத்துவரே (Gouthama  Buddha) முதன்முதலில் அந்த முறையைதான் கடைப்பிடித்தார் .அப்படி ஒர் முறையை மாணவர்களுக்கு  பயிற்றுவிக்கும் போது அவர்களது உடல் அதற்கு ஒவ்வாததால் அவர்களின் உடலினை சரிவர கட்டமைக்கும்பொருட்டே அவர்களுக்கு தற்காப்பு கலையினை போதிதர்மன் பயிற்றுவிக்கக் தொடங்கினார்.

 போதிதர்மன் திறமைசாலி என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை . அதற்காக அவரை ஓர் தெய்வப்பிறவியாக, ஆக்ஷன் ஹீரோவாக  படத்தில் காட்டியிருப்பது, இயக்குனர் மிகவும் உணர்சிவசப்பட்டுள்ளார்  என்பதையே காட்டுகிறது. இதை வெறும் சினிமா என்று ஒதுக்கமுடியாததர்க்கு  காரணம், இறுதியில் “போதிதர்மன் ஓர் தமிழர். உங்களில் எத்தனைபேருக்கு அவரை தெரியம் ?” என்பன போன்ற சில கேள்விகளை உணர்ச்சி மிகுதியில் பார்வையாளர்களை   நோக்கி இயக்குனர் முன்வைப்பதனால்.

(அட போங்க பாஸ். நீங்க ஓர் காமெடி பீஸ். பல தமிழனுக்கு ஜெயகாந்தன்யாரு நகுலன்யாருனே தெரியாது. யாப்பெருங்காலகாரிகை என்றால் என்னான்னு தெரியாது….)

முதல் இருபது நிமிடம் உணர்ச்சிய கொஞ்சம் கட்டுபடுத்தி இருந்திருக்கலாம்…

இரண்டாம் பகுதி 

படத்தை இரண்டு பகுதிகளா பிரிக்கலாம். முதல் பகுதி-போதி தர்மன் காட்சிகள். போதிதர்மன் இல்லாத பகுதி இரண்டாம் பகுதி.

 இரண்டாம் பகுதின்னு குறிப்பிட காரணம், இருபத்தைந்தாவது நிமிடம் தொடங்கி படம் எங்க பயனிக்கிரதுன்னு தெரியாமலயே போவதனால்..

இந்த படமுழுக்க அப்படிதான் காட்சியமைக்கப்பட்டிருகிறது. சம்பந்தமற்ற தொடர்பற்ற காட்சிகள். அதற்காக இத ஓர் நான் சீக்யுன்சியல் (non-sequencial/ non linear narrative ) படம்   என்று நினைத்துவிட வேண்டாம். திரைக்கதை ஆசிரியர் ரொம்ப திணறி இருக்கிறார்.

 93 நாட்களுக்கு முன்பு என்று இரண்டாம் பகுதி ஆரமிக்கிறது. அது எதுக்குன்னு இன்னும் புரியல…

எந்த படமாக இருந்தாலும் காட்சிகள் சரமாரியாக நகரக் கூடாது. ஆனா இந்த படத்துல சம்பந்தமே இல்லாம  காதல் காட்சிகள் ரொம்ப வேகமா நகர்கிறது. எந்த காட்சியும் மனசுல பதிய  மாட்டேங்குது. ஏதோ  படத்த  இரண்டரை மணி நேரம் ஓட்டனும் என்பதற்காகவே காட்சி வைக்கப்பட்டதா தோணுது…

 திரைக்கதை

உலகத்துல எல்லாத் திரைக்கதைக்கும்  ஒர் பொதுவான வடிவம் இருக்கு. அதிகம் பயன்படுத்தப்படுவது மூன்று அங்க சட்டமைப்பு (Three act strcucture) என்பது.

அதாவது முதல், நடு, முடிவு

1.அறிமுகம் (Intro)

2.முரண்பாடு (Confrontation)

3.தீர்வு (Resolution)

 இந்த எந்த வடிவமே கதைமாந்தர்களுக்கு பொருந்திவரல. இதில் ஆச்சர்யம் ,இதற்குமுன் மூன்று அருமையான திரைகதைகள எழுதிய இயக்குனர் இதுல எப்படி சறுக்கினார் என்பதுதான் (யானைக்கும் அடி சறுக்கும் !)

 மேற்கூறிய வடிவம் பொருந்துற ஒரே கதாபாத்திரம் அந்த விஞ்ஞானி கதாபாத்திரம்தான். ஷோபா என்ற ஓர் விஞ்ஞானி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அந்நிய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து எப்படி மீண்டு வராங்க என்பதே கதை ஓட்டம் (இதிலிருந்து தெளிவாகிற விஷயம், நிச்சயம் விஞ்ஞானி கதாபாத்திரம்தான் போதிதர்மனுக்குபின் முக்கிய கதாபாத்திரமா இருந்திருக்கணும்.அதாவது சூரியா நடிசிருக்கணும்.  ஏதோ கவர்ச்சி வேணும் என்பதர்க்ககவே அந்த கதாபத்திரத்த ஓர் பெண்ணை நடிக்கக் வச்சுடாங்க. (பெண் என்கிற காரணத்தால் அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை குறைத்திருக்கலாம். தமிழ் சினிமா ஆண் ஆதிக்கம் நிறைந்தது !)

 பாத்திரப்படைப்பு   

மேற்கூறிய மாதிரி பாத்திரபடைப்பில் நிறைய சமரசம் செய்யப்படிருகிறது. அந்த சர்கஸ்காரன் கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப அலங்கோலமா வந்திருக்கு. அவன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுறத கூட மன்னித்துவிடலாம். ஆனால் ஆடி மாசம் சாமி வந்து ஆடுறது மாதிரி, இறுதிக் காட்சியில் போதிதர்மன் உடம்புல வந்தவுடன் கொடுக்குற ஓர் ரீயாக்சன் தான் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்…

முக்கிய கதாபத்திரம் அனைத்தும் அந்நியமாவே படுது. மனதில் நிற்க மறுக்கிறது. வில்லன் வாங்குன காசுக்கு சண்ட போட்டிருக்கிறார் (இவங்க கூட்டுற அலப்பறை அளவுக்கெல்லாம் அவர் ஒன்னும் பெருசா நடிக்கல)

கதாநாயகிதான் ரொம்ப பாவம். என்ன நடிக்கிரோம்னு தெரியாமலேயே நடிச்சிருக்காங்க.

 வசனம்

படத்தின் முக்கிய பலம் சில வசனங்கள். தமிழனோட பெருமைய குறிக்கிற வசனங்களில் கவனம் செலுத்திய வசனகர்த்தா  , மற்ற   இடங்களில் கோட்டைவிட்டுட்டார்  .. நிறைய இடத்துல ரொம்ப மொக்க வசனம்,

யானை மேலே உட்கார்ந்துக்கொண்டு கதாநாயகி சொல்லுவாங்க “அய்யோ  குத்துது. ” நாயகன் சொல்லுவார் “அதுக்காக டைல்சா போடமுடியும் “

இப்படி மொக்க வசனங்கள   பேசி அவங்க ரெண்டு பேரும் சிரிப்பாங்க. சத்தியமா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் சிரிப்பாங்க. படம் பார்க்குறவங்க அழுவாங்க. ஏனா  உடனே தேவைற்ற ஓர் பாட்டு வரும். தமிழ்  படங்களில் தேவையில்லாம பாட்டு வைக்கிறதா கொஞ்ச நாள் தவிர்த்திருந்தாங்க. இப்போ மீண்டு ஆரமிச்சிடாங்கபா

திரு.சூரியாவை தவிர்த்து மற்ற எல்லாரும் பல இடங்களில் வசங்கள  பேசும் போது ஏதோ உணர்ச்சியே இல்லாத மாதிரிதான் பேசுறாங்க . உதாரணம் ,

“முடியும் இதெல்லாம் ஒருத்தராலதான் முடியும்…போதிதர்மன் ” (ஏதோ போக்கிரி படத்துல விஜய் intro பார்த்த மாதிரி இருந்துச்சு . .அதவிட கேவலமா இருந்துச்சு)

“லேப் கீய எடுத்துகிட்டு  புது சிம் கார்ட் வாங்கிட்டு நாளைக்கு காலைல வந்திருவான் “இப்படி எல்லாரும் வசனத்தை மனபாட செய்யுள் மாதிரி ஒப்பிகிறாங்க..

இசை

படத்தோட முக்கிய பலம் இசை. ஏனென்றால் இந்த படத்தின் இசை

உங்களுக்கு மலரும் நினைவுகள கொடுக்கும்,பழைய காலத்தை

ஞாபகப்  படுத்தும்.

அதாவது மொத்த இசையும் எங்கேயோ கேட்டமாதிரி

இருக்கும்! குறிப்பா போதிதர்மனின் அறிமுகப் பாடல் (Rise of damo) ..

அதை கேட்டா  நீங்க குழந்தைப் பருவத்திற்கே போயிருவீங்க

“Jhonny Jhonny yes papa….

Twinkle twinkle little star… “

(அத்தனையும் ஒரிஜினல் ட்யூன். ரூம் போட்டு யோசிப்பாங்களோ !)

படத்தின்பலம்

உண்மையாக படத்துல ஒழுங்கா நடிச்சிருக்குறது போதிதர்மன் சூரியா.. தன் கதாபாத்திரத்திற்கு  நியாயம் செய்திருக்கிறார். போதிதர்மானாக  அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது. அவர் கண் அசைவுகள் அருமை..

நிச்சயம் சில நல்ல வசனங்கள் வைத்ததற்கு இயக்குனர பாராட்டியே ஆகணும்..இந்த படத்தோட மூலக்கதை என்னமோ நல்லாத்தான் இருக்கு . போதிதர்மன் திரும்பி வந்த எப்படி இருக்கும் என்பதே அது..ஆனா  எடுத்த விதம்தான் சகிக்கல..

என்னதான் ஆனியன் தோசையாகவே இருந்தாலும் ஆனியன மட்டும் சாப்பிட முடியாது. இங்க ஆனியன் மட்டும் வெந்திருக்கு..தோசை சுத்தமா வேகல…அரைவேக்காடு முட்டைய சாப்பிடலாம் ..அரை வேக்காடு தோசைய சாப்பிட முடியுமா !

இயக்குனர் ரொம்ப பீல் பண்ணியிருக்கார்.. ஆனா 83 கோடி போட்டு பீல் பண்ணினது ரொம்ப ஓவர் …

“அதுக்காக நீ ஏன் பீல் பண்ணுற ?” என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுது..

அவர் ஓர் கமர்சியல் படம் பண்ணிருந்தார் என்றால் நானும் கை தட்டிட்டு வந்திருப்பேன்…ஆனா ஏதோ இவருக்குதான் இன உணர்வு இருக்கிறது மாதிரி பீல் பண்ணி இன உணர்வ தூண்டுறதா நினைத்து கொண்டு இன உணர்வ சீண்டிவிட்டுட்டார் ..

KFC சிக்கன் சாப்பிட்டு , வெளிய வந்து கம்யுனிசம் பேசுற மாதிரி, இவரும் ஒரு மொக்க மசாலா படத்துல ஓவரா தமிழ் உணர்வ திணித்திருக்கிறார்..கல்லா கட்டுறதுக்கு செய்யப்படும் சந்தர்பவாத அரசியலே இது…

நாற்பது லட்சத்துல மாற்று சினிமா எடுக்கமுடியும்..Children of heaven, tri colors,மாதிரி படங்கள்  எடுக்க அதிக பட்சம் ஒரு கோடி தேவைப்படும்..மூணு கோடி இருந்தா கலை காவியமே படைக்க முடியும்..அத விடுத்து, காசு இருக்குனு ஒரே காரணுத்துக்காக சரடு திரிக்கிறத தான் தாங்கிக்க முடியல…

இயக்குனரோட இன உணர்வ கேள்வி கேக்குற உரிமை யாருக்குமில்லை…நிச்சயம் அவர் தமிழ் இனத்துமேல  பற்று  கொண்டதால்தான்  இந்த  கதைய ஆரமிச்சிருக்கார்..ஆனா இறுதியில் சீரளிச்சிட்டார்…

போதிதர்மான பத்தி இன்னும் நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கலாம்…ஒரு கமர்சியல் படத்தில் இத்தனை கோடிய வீணடித்ததற்கு பதிலாக போதிதர்மனை பற்றியோ அல்லது தமிழ் சமுதாயத்தை பற்றியோ ஓர் நல்ல ஆவணப் படம் எடுத்திருக்கலாம் (ஆவணப் படம் எடுப்பது கேவலம் என்பது போன்ற ஓர் சூழல் இங்கு நிலவுவது நம் சாபக்கேடு )

அதை சப்டைட்டில்ஸ் (Subtitles) போட்டு இணையத்திலும் பிரபல தொலைகாட்சிகளிலும் வெளியிட்டிருந்தால், தமிழனின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கும்.

திரு.முருகதாஸ் மாதிரி இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் அதை செய்யும் போது அந்த ஆவணப்படம் எளிதில் உலகெங்கும் பரவியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

வருங்காலத்திலாவது இதுபோல் அரை வேக்காடு படங்களுக்கு காசை வீணடிக்காமல் , நல்ல முயற்சிகளுக்கு செலவழிப்பார்கள் என நம்புவோம்..நல்ல முயற்சிகளுக்கு தமிழனின் ஆதரவு என்றுமே இருக்கும்…

11 thoughts on “7 ஆம் அறிவு

    • sorry for leaving the comments in english as i am bad in spelling and worse in expressing in tamil. first of all the whole thing about tamil didnt fantasize me… most of the problem in this world comes only because we lean towards something… in this case tamil. be human.. thats enough… and about the flim it s**ks. i expected a lot from this movie because of the director… i didnt analyse the movie as aravind did but the movie didnt have any comedy which is the real bad thing which i thought would have made a big difference. another thing is that hypnotism is not the movies true evil which he fights from the first. its the people… he must have taken care of if he wanted to make the movie good. aravind didnt mention another actors name who really acted well it is Johnny Tri Nguyen. did his role with ease. i dont think kicking butts is the movies main aim.. surya in climax hit three punches the movie get over. if story main aim was to say people how it would be if Mr. Bohdhi dharma came alive today. And about the screenplay what would have been better is shruthi could have explained the whole story of bodhi dharma to surya instead of saying the story in different line. i dont know about the technical skills or acting skills but in my view the movie has very bad screenplay.

      Like

      • பிற நடிகர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஜானி நன்றாகவே நடித்துள்ளார்…

        Like

  1. De movie had a worst screenplay.. tats for sure.. every dialogue abt eelam was gud.. to be more precise oly those dialogues abt eelam was gud.. Though i liked one comedy line “Wat is your name-u..??”.. Mass line..

    Aparam antha director irukar la avaru adikadi tv la vanthu inimel unga ellathukum tamil na oru thimiru varum nu kathikinae irunthaar.. Paavam pa avar.. Manam rosam ullavan ellathukum antha karvam kandipa irukum.. Intha padatha paathu oruthanuku antha thimiru or karvam vabthuchu sonna atha vida ulaga maha poi vera ethuvumae illa..

    Atlast dei domer mandaya athu en KFC saaptitu communism paesa koodathu.. Though tis may sound rite.. communism enna KFC ku ethiranatha.. avan avan kaasula socialismo, communismo paesalam.. Aduthavan kaasula thaan socialism paesa koodathu.. atha therinjuko..

    Like

    • நான் பிறர் உரிமையை சுரண்டும் முதலாளித்துவத்தையே எதிர்க்கிறேன்…ஆனால் அடுத்த வேலை கஞ்சிக்கு வழியற்ற சக மனிதர்களை பார்க்கும் போது நாமும் அந்த முதலாளித்துவக் கூட்டத்தை சார்தவர்களோ என உளம் சஞ்சலப் படுகிறது…

      Like

  2. Pingback: மாற்றான் « aravindhskumar

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.