poems
-
நான் ஒரு ஜடம்
என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன் ஆதி அந்தமற்ற ஒருவனாய் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் சுட்டெரிக்கும் வெயில் குளிரடிக்கும் காற்று முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும் என்னை கவர்ந்துவிடவுமில்லை பறந்து விரிந்த இந்த வானம் காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும் என்னை அசைத்துவிடவில்லை ஆம் நான் ஒரு ஜடம் உலகம் என்னை அப்படி தான் அழைக்கும் என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் பார்த்துகொண்டு Continue reading
-
உதிக்க மறுத்திடுமோ சூரியன்!
அதிகாலை பொழுது கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை… நான் மட்டும் தனியாக சாலையில் எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது தனிமைப்பட்ட என்னுடன்… நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில் பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில் அன்று கண்டேன், இயற்கையின் சரீரத்தையும் சமுகத்தின் குரூரத்தையும்… சாலையின் வலப்புறம் புதருக்கடியில்… புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்… சாலையின் இடப்புறம் இரண்டு நாய்கள் இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை காணவில்லை நான் Continue reading