திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை


“அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம்.

“ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி.

அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு விழுந்ததும் இருவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர்.

உள்ளிருந்து அவர்களின் தாயின் குரல் கேட்டது,”வீடியோ கேம் விளையாண்டது போதும். போய் படுங்கடா…”:



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.