tamil poems
-
ஒன்றுமில்லை- கவிதை
என் வீட்டின் மேல் வட்டமிட்ட அந்த புறா முட்டையிட்டு சென்றது ஒருநாள்… முட்டையை நான் பாதுகாத்தேன் மிதமான சூட்டில்… ஒரு நாள் கண்டேன் உடைந்த முட்டை அதனருகில் ஓர் பாம்பு இன்னும் விளங்கவில்லை ! புறா முட்டையிலிருந்து எப்படி வந்தது பாம்பு ! *** நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன் உள்ளே என்ன என்றேன் ஒன்றுமில்லை என்றான் மூட்டையை அவிழ்த்தேன் ஆம் ஒன்றுமே இல்லை. Continue reading
-
யார் அவன்
தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுபவன் தப்பிப் போயும் தமிழ் பேசாதவன் தாரம் வந்தால் தாயை மறக்கும் மகன்போல ஆங்கில வேசியின் மடியில் சாய்ந்து தமிழ் தாயை மறப்பவன் தமிழ் பேச மறுப்பவன்… ஈழத்திலே தலை விழுந்தாலும் தெருக்கோடியிலே கொலை நிகழ்ந்தாலும் முதுகெலும்பற்ற ஜடமாய் ஊர்ந்து செல்வான் முடமாய்… எந்திரத்தை மனிதனாக்க ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கண்டவன் தான் எந்திரமாகி போனதை ஒப்புகொள்ள மறுப்பவன்… பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவிப்பதால் தான் அவன் பொறியாளன் Continue reading