நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்

“நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்”- குறுநாவலிலிருந்து

என்னுடைய அடுத்த குறுநாவல், அந்தாதி பதிப்பகத்தின் மூலம் சென்னை புத்தக கண்காட்சி சிறப்பு வெளியீடாக வந்திருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

44வது புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (எண் 166,167) கிடைக்கும்

நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்