மெட்ராஸ் கதைகள்


மெட்ராஸ்’ தான், 2015-க்கு பிறகு
நான் எழுதிய பெரும்பாலான கதைகளில் பேசு பொருளாக இருந்திருக்கிறது. அது எனக்கு தெரிந்த, நான் வாழும் மெட்ராஸ். எதிலிருந்து எதுவரை மெட்ராஸ் நீள்கிறது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கக் கூடும்.

மந்தவெளியில் இருப்பவர்களுக்கு தாம்பரம் வெளியூராக தெரியும். என்னை போன்ற தாம்பரம் வாசிகளுக்கு கிண்டியை தாண்டி போவதே நெடும் பயணமாக தோன்றும். வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பே இந்த பெருநகரம். அந்த அனுபவங்களின் வெளிப்பாடே என்னுடைய ‘மெட்ராஸ் கதைகள்’.

கண்டதை உணர்ந்ததை மனதிற்கு நெருக்கமானதை எழுதும்போது மட்டுமே அது அசலான இலக்கியமாகும் என்பது என் நம்பிக்கை.

இன்று மெட்ராஸ் தினம்.

என்னுடைய சில ‘மெட்ராஸ்’ கதைகளை கீழே உள்ள சுட்டியில் வாசிக்கலாம்.

மெட்ராஸ் கதைகள்

Happy Madras Day

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.