ஒன்பதாவது ஆண்டில்…


இந்தத் தளம் இன்று தன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தளம் தான் எனக்கான சிற்றிதழ், வெகுஜன இதழ், திரைக்கதை இதழ் என எல்லாமுமாக இருக்கிறது.

Versatile-ஆகா, Consistent-ஆகா கதைகள் எழுதவே இந்தத் தளத்தை தொடங்கினேன். அதை விடாமல் செய்யமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி உண்டு.

என்ன எழுத வேண்டும், என்னவெல்லாம் எழுதிவிடக் கூடாது, எந்தத் தொனியில் எழுதிவிடக் கூடாது என்று சொல்லித்தந்தது இந்தத் தளம் தான்.

மணிரத்னம் படைப்புகள் புத்தகத்தை படித்து, “Translation is pathetic” என்றார் ஒருவர்.

ஒரு நடிகரின் அலுவலத்தில் என்னை விட வயதில் இரண்டுமடங்கு மூத்த  Production Manager என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு,

“யோவ் தம்பி, நான் எட்டாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். படிக்க ரொம்ப ஈசியா இருந்துச்சுயா இந்த புக். அருமையா தமிழ் பண்ணிருக்க…!” என்றார்.

கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும் கதையை ஒரு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை என்று ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.

“சின்ன வயசுல எங்க ஆயா புடவையை போத்திகிட்டு தான் தூங்குவேன். எல்லாரும் தப்பா பேசுவாங்க. இந்த கதை படிக்கும் போது அவங்க நினைப்பு வந்திருச்சு… ரொம்ப புடிச்சிருக்குபா” என்று வேலூரில் இருந்து அறுபது வயதுக்காரர் ஒருவர் போன் செய்து கண் கலங்கினார்.

தட்பம் தவிர் டைம் பாஸ் கதை என்றார் ஒருவர். இது அறிவார்ந்த படைப்பு, எங்களது மாதிரி நீதிமன்றத்தில் வழக்குகளை கையாள மிகவும் துணையாக இருந்தது என்றார் ஒரு சட்டக் கல்லூரி மாணவி.

இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதுகிறோம் என்று சொல்வதற்கில்லை. அப்படியெல்லாம் எழுதவும் முடியாது. நம் எழுத்து யாரை எங்கே எப்படி பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது என்பதே சொல்ல விளைவது.  மேலும் இங்கே எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது. அப்படி திருப்தி படுத்த முயற்சிப்பது எழுத்தாளனின் வேலை அல்ல.

எழுத்தாளனின் வேலை, எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், எழுதுவது மட்டுமே. நம் எழுத்து எங்கே யாரை சென்று அடைய வேண்டும் என்பதை காலம் பார்த்துக் கொள்ளும்…

மற்றபடி எழுதுவது பிடித்திருக்கிறது என்பதுதான் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும். குடும்பமும் நட்பாய் துணையாய் நிற்பது கூடுதல் பலமாக இருக்கிறது.

இப்போது முறையாக மனோதத்துவம் பயின்று வருகிறேன். வரும் ஆண்டுகளில் எளிய தமிழில் மனோதத்துவம் பேச வேண்டுமென்று ஆசையும் திட்டமும் இருக்கிறது.

நன்றிகள், அன்பையும் ஊக்கத்தையும் கலந்து தரும் அத்தனைப் பேருக்கும்…

எப்போதும் நம்புவது ஒன்றைத்தான். எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதை விட, தொடர்ந்து எழுதுவது முக்கியமாகிறது…

Once again thank you all for your love and support…

aravindhskumar.com is growing like never before…

aravindhskumar anniversary.jpg

 

2 thoughts on “ஒன்பதாவது ஆண்டில்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.