யார் அவன்


தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுபவன்

தப்பிப் போயும் தமிழ் பேசாதவன்

தாரம் வந்தால் தாயை மறக்கும் மகன்போல

ஆங்கில வேசியின் மடியில் சாய்ந்து தமிழ் தாயை மறப்பவன்

தமிழ் பேச மறுப்பவன்…

 

ஈழத்திலே தலை விழுந்தாலும்

தெருக்கோடியிலே கொலை நிகழ்ந்தாலும்

முதுகெலும்பற்ற ஜடமாய்

ஊர்ந்து செல்வான் முடமாய்…

 

எந்திரத்தை மனிதனாக்க ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கண்டவன்

தான் எந்திரமாகி போனதை ஒப்புகொள்ள மறுப்பவன்…

 

பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவிப்பதால் தான்

அவன் பொறியாளன் !

 

க்வாரியில் கல் உடைக்கும் கொத்தடிமைகளை மீட்கும் சமுக இயக்கங்களே !

MNC க்கு கூலி வேலை செய்யும் இந்த நவீன கொத்தடிமைகளை மீட்க முயற்சிப்பீராக..



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.