பிணம் தின்னி


பிணம் தின்னி

அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் 
அது பெரும் சிரிப்பு
பேருவகைச் சிரிப்பு

மனமெல்லாம் ஆனந்த களிப்பு
கண்களில் சாதித்த வெறி
கைகளை தட்டி தட்டி
அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்

அவள் கை தட்டளுக்கிடயே
சிக்குண்டு செத்தது என் இனம்
அவள் பெரும் குரல் எழுப்பிச்  சிரிக்கிறாள்
அதில் ஒழிந்து போகிறது,
என் மீனவனின் கதறல் ஒலி
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் வலி…

இழவு வீட்டில் வந்து சிரித்துவிட்டு ,
அவர்கள் சுகமாகத்தான் உள்ளார்கள் என
கூறி கூறி சிரித்துக் கொண்டிருக்கிறாள்
பிணக் குவியல்களுக்கு மேல் பூந்தோட்டம் அமைத்து,
இது அமைதி பூங்காவனமென
உலகை நம்பவைத்துக் கொண்டிருக்கிறாள்

பிணங்களை புணரும் பேடிகளுக்கு
பணமும் ஆயுதமும் கொடுத்து
ஊக்குவித்துக் கொண்டிருக்கிறாள்-ஆனால்
அந்த ஆயுதமே அவள் நெற்றிப் பொட்டையும்
ஒரு நாள் பதம் பார்க்கும் என்பதை
மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள்

அவள் பிணங்களினூடே புகுந்து,
பித்தம் தெளிய
இரத்தம் குடிக்கிறாள்.
அது தெளியவில்லை
அவள் தாகம் அடங்கவில்லை, எனவே
வெறிக்கொண்டு சிரிக்கிறாள்
புது பிணம் வேண்டி நிற்கிறாள்  …

பிணம் கேட்டு இவள்
பணம் தர,பெற்றுக் கொண்ட
பேடிகள் இவள் காலடி நிரப்புகிறார்கள்
பிணக் குவியல்களால்.
‘பற்றாது. இன்னும் பிணம் செய் !’
என்கிறாள்

இதோ வீதி எங்கும்  பிணங்கள்
தலை வெட்டப்பட்ட முண்டங்கள்
அடிபட்டு, மிதிபட்டு
கை அறுப்பட்டு,
கற்பழிக்கப்  பட்டு
முழி பிதுங்கி

அவமான படுத்தி
அமனமாக்கப்  பட்ட
உடல்கள்
நேற்றைய சௌந்தர்யங்கள்
இன்றைய பிணங்கள்.

‘ போதாது !’
இன்னும் கேட்கிறாள் அவள்
அழியாத மோகம் கொண்டு
தீராத தாகம் கொண்டு.

‘அன்னையே! தீர்ந்தது எல்லாம்.
எவ்வளவு பிணங்களை கொட்டி விட்டோம் !
இனிமேல் கொண்டு வர ஈழத்தில் ஏது பிணம் ?’
எடுத்துரைத்தான் ஒரு பேடி

‘தீர்ந்ததோ பிணம் ?
என்னிடம் தீராது பணம்! .
பல வகையான பணம்
உலக முதலாளிகளின் பணம்
கடல் கடந்து போ
தென்னாடு போ
அள்ளிவா புதுப் பிணங்களை…

‘ஐயகோ! அன்னையே
அவர்கள் கருப்பர்கள்
வாழ வக்கிழந்த
கட்டுமர மீனவர்கள்
தமிழர்கள்’

தமிழனை புசித்து
ருசி கண்ட அவளுக்கு
இன்னும் ரத்தம் வேண்டுமாம்.
‘கருப்பனாக இருந்தாலும்
அவன் ரத்தம் சிகப்பு தானே!
அவனை அடித்து
கடலிலே  மூழ்கடித்து
தீட்டு கழித்து
கொண்டுவா அந்த மீனவப் பிணங்களை
தமிழனின் ரத்தம் என்றும் ருசிக்கும்’

புசிக்க
ஆயிரம் ஆயிரமாக மீனவப் பிணங்கள்,
குடிக்க
ருசிமிக்க தமிழ் ரத்தம்
இன்னும் அவா அடங்கவில்லை அவளுக்கு.

‘அரக்கர்களின் ன் பசிகூட அடங்கி இருக்குமே
இன்னும் இவள் பசி அடங்க வில்லையே !’
பதறி பின்வாங்கியது பேடிப் படைகள்.
‘அன்னையே மீனவனும் ஒழிந்தான்.
பலர் தன்னை தானே அழித்துக் கொண்டனர்
பலர் ஓடி விட்டனர்
மிஞ்சி இருப்பது வல்லம் மட்டுமே
யாது செய்வோம் நாங்கள்’
கதறினார்கள் அந்த பேடிகள்

அவர்கள் மேல்
காரி உமிழ்ந்துவிட்டு சிரித்தாள்
இள முதல் கிழ ரத்தம் வரை
குடித்த அந்த வேசி .
‘ பேடிகளே! போங்கள்
ஒளிந்துக் கொண்டிருக்கும் மீனவர்களை
இழுத்து வாருங்கள்
எங்காவது பிணமாக எரிந்து கொண்டிருந்தாலும்
பிடுங்கி வாருங்கள் .
நான் போகிறேன் தென்னாட்டிற்கு
அங்கே ஓர் கிழவன்
கோடிகளை கொட்டிக் கொடுத்தால்- யாரையேனும்
கூட்டிக் கொடுப்பான்
முடிந்தால் அவனையும் புசித்து விட்டு வருகிறேன் ‘
என்று சிரித்தவாறே புறப்பட்டாள் தென்னகம் நோக்கி.

தமிழ்நாடு எங்கும் இருள் பரவியது
வானமே அதிரும்படி அவள் சிரித்தாள்
விடிந்தவுடன்
எங்கு நோக்கினும் பிணக் குவியல்கள்
ரத்தம் உறியப் பட்ட நிலையில்.
அதையும் புணர்ந்து கொண்டிருந்தார்கள்
அந்த பேடிகள்…

 வானமே அதிரும்படி மீண்டும் சிரிக்கிறாள்
இன்னும் பிணம் கேட்கிறாள் அவள்
அழியாத மோகம் கொண்டு
தீராத தாகம் கொண்டு….



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.