ஒன்றுமில்லை- கவிதை


என் வீட்டின் மேல்
வட்டமிட்ட அந்த புறா
முட்டையிட்டு சென்றது
ஒருநாள்…

முட்டையை
நான்
பாதுகாத்தேன்
மிதமான சூட்டில்…

ஒரு நாள்
கண்டேன்
உடைந்த முட்டை
அதனருகில் ஓர் பாம்பு

இன்னும் விளங்கவில்லை !
புறா முட்டையிலிருந்து
எப்படி வந்தது
பாம்பு !

***

நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன்
உள்ளே என்ன என்றேன்
ஒன்றுமில்லை என்றான்
மூட்டையை அவிழ்த்தேன்
ஆம் ஒன்றுமே இல்லை.