என் வீட்டின் மேல்
வட்டமிட்ட அந்த புறா
முட்டையிட்டு சென்றது
ஒருநாள்…
முட்டையை
நான்
பாதுகாத்தேன்
மிதமான சூட்டில்…
ஒரு நாள்
கண்டேன்
உடைந்த முட்டை
அதனருகில் ஓர் பாம்பு
இன்னும் விளங்கவில்லை !
புறா முட்டையிலிருந்து
எப்படி வந்தது
பாம்பு !
***
நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன்
உள்ளே என்ன என்றேன்
ஒன்றுமில்லை என்றான்
மூட்டையை அவிழ்த்தேன்
ஆம் ஒன்றுமே இல்லை.